மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெக

தலைமை தேர்தல் அதிகாரியை நாளை (மார்ச் 31) சந்திக்க தவெக திட்டமிட்டுள்ளது.

News image

பெரம்பூரில் பிரசாரம் செய்த விஜய் - பிடிஐ

Updated On :30 மார்ச் 2026, 1:28 pm

தேர்தலையொட்டி நடைபெறும் பிரசாரத்தின்போது இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது என தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (மார்ச் 30) வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டு, பெரம்பூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து வில்லிவாக்கம், அண்ணாநகர், தொகுதிகளில் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு குறைபாடு காரணமாக விஜய்யின் பிரசாரத்தை ரத்து செய்வதாக தவெக தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தவெக பிரசாரத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என தேர்தல் ஆணையத்திடம் தவெக நிர்வாகிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களுடன் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:

''வாக்களிப்பதைப் போன்று வாக்கு சேகரிக்கச் செல்வதும் ஜனநாயகக் கடமை. தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் வைக்கிறோம். பிரசாரத்தின்போது இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது.

காவல் துறையில் இன்றும் சிலர் முதல்வர் பேச்சைக் கேட்டு செயல்படுகின்றனர். கடந்த 8 மாதங்களாகவே எங்களுக்கு எதிராகத் திட்டமிட்டு முதல்வர் செயல்படுகிறார்.

கொளத்தூரில் விஜய் பிரசாரத்தைத் தடுக்க திட்டமிட்டுள்ளனர். இதனைத் தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்னும் 2 முறை கொளத்தூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்டால் மு.க. ஸ்டாலின் தோல்வி அடைவார்.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே தவெகவின் கோரிக்கை. மக்கள் பாதுகாப்பு கருதியே பிரசாரத்தை வில்லிவாக்கத்தில் இன்று நிறுத்தினோம். நாளை தலைமை தேர்தல் அதிகாரியை சந்திக்கவுள்ளோம்'' எனக் குறிப்பிட்டார்.

Summary

Vijay Campaign struck Another Karur like' incident must not occur: TVK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.