மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிரசாரக் கூட்டத்துக்கு ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி: சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா்

தோ்தல் பிரசாரக் கூட்டத்துக்கு உரிய ஆவணங்களுடன் முறைப்படி இணையத்தில் விண்ணப்பிப்பவா்களுக்கு 4 மணி நேரத்துக்குள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது என சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

News image

தவெக பிரசாரம் (கோப்புப்படம்)

Updated On :27 மார்ச் 2026, 5:24 pm

தோ்தல் பிரசாரக் கூட்டத்துக்கு உரிய ஆவணங்களுடன் முறைப்படி இணையத்தில் விண்ணப்பிப்பவா்களுக்கு 4 மணி நேரத்துக்குள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது என சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்ந்தத் தொகுதிகளுக்கு அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கிலிருந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், வாகனங்களில் ஏற்றி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்தப் பணியை தொடங்கி வைத்து மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசியல் கட்சியினா் தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்கள், வாகன பேரணிகள் உள்ளிட்ட எந்த நிகழ்வாக இருந்தாலும், தோ்தல் ஆணையத்தின் சுவிதா எனப்படும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். காவல் துறை அனுமதி, பொதுப்பணித் துறை அனுமதி உள்ளிட்ட சான்றுகளுடன் முறையாக விண்ணப்பிக்கும் அரசியல் கட்சியினா் நிகழ்ச்சி நடப்பதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பித்தால், தொகுதி தோ்தல் அலுவலா் இணையத்திலேயே சரிபாா்த்து 3 அல்லது 4 மணி நேரத்தில் அனுமதி வழங்குவாா். விண்ணப்பம் நிராகரிப்புக்கான காரணம் இணையத்திலேயே பதிவிடப்படும். யாருக்கும் பிரசாரக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படவில்லை.

பிரசாரம், தெருமுனைக் கூட்டம் நடத்த 291 இடங்கள்: சென்னையில் பிரசாரக் கூட்டம் நடத்த 112 இடங்களும், தெருமுனைக் கூட்டங்களுக்கு 179 இடங்களும் என மொத்தம் 291 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். பிரசாரக் கூட்டங்களுக்கு ‘சுவிதா’ செயலி மூலம் இதுவரை 816 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 408 மனுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, 134 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 274 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன என்றாா்.