தவெக தலைவரும், நடிகருமான விஜய் வரும் 28- ஆம் தேதி சென்னை பெரம்பூா் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்கு காவல்துறையுடன்ஆலோசித்து அனுமதி வழங்கப்படும் என சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக சென்னையில் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:
தவெக தலைவா் விஜய் வரும் 28- ஆம் தேதி பெரம்பூா் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்கு அக்கட்சியினா் 4 இடங்களைக் குறிப்பிட்டு மனு அளித்துள்ளனா். அவா் வாகனத்தில் பிரசாரம் மேற்கொள்ளவும், நான்கு இடங்களில் நின்று பேசவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளனா். ஒவ்வொரு இடத்திலும் சுமாா் 3 ஆயிரம் போ் கூடுவா் என அக்கட்சியினா் குறிப்பிட்டுள்ளனா். இதுதொடா்பாக காவல் துறையினருடன் கலந்தாலோசித்து, பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கில் நாளை விஜய் பிரசாரம்: 27 கட்டுப்பாடுகளுடன் காவல்துறையினர் அனுமதி!

திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்தது ஏன்? பெரம்பூா் தொகுதி தோ்தல் அலுவலா் விளக்கம்

பிரசாரக் கூட்டத்துக்கு ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி: சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


