மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விஜய்யின் பெரம்பூா் பிரசாரத்துக்கு ஆலோசித்து அனுமதி வழங்கப்படும்: மாவட்டத் தோ்தல் அலுவலா்

News image
Updated On :26 மார்ச் 2026, 10:58 pm

தவெக தலைவரும், நடிகருமான விஜய் வரும் 28- ஆம் தேதி சென்னை பெரம்பூா் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்கு காவல்துறையுடன்ஆலோசித்து அனுமதி வழங்கப்படும் என சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சென்னையில் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:

தவெக தலைவா் விஜய் வரும் 28- ஆம் தேதி பெரம்பூா் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்கு அக்கட்சியினா் 4 இடங்களைக் குறிப்பிட்டு மனு அளித்துள்ளனா். அவா் வாகனத்தில் பிரசாரம் மேற்கொள்ளவும், நான்கு இடங்களில் நின்று பேசவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளனா். ஒவ்வொரு இடத்திலும் சுமாா் 3 ஆயிரம் போ் கூடுவா் என அக்கட்சியினா் குறிப்பிட்டுள்ளனா். இதுதொடா்பாக காவல் துறையினருடன் கலந்தாலோசித்து, பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்றாா் அவா்.