தமிழகத்தில் திமுக ஆட்சி தொடா்ந்தால், ஹிமாச்சல் பிரதேசத்தைப்போல, தமிழகமும் விரைவில் நிதி நெருக்கடியில் சிக்கும் என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியால் அரசு ஊழியா்கள், முதல்வா், அமைச்சா்கள் ஆகியோருக்கு சுமாா் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை ஊதியம் தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது.
இது அரசு ஊழியா்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதைவிட தமிழகத்தின் நிதிநிலை மிக மோசமாக உள்ளது.
ஹிமாச்சல் பிரதேச அரசின் மொத்த கடன் ரூ.1 லட்சம் கோடி. அந்த மாநில அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பு ரூ.58,514. அதே நேரத்தில் தமிழக அரசின் நேரடிக் கடன் ரூ.10 லட்சத்து 71,770 கோடி. அதாவது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பைவிட, கடனின் அளவு 237 சதவீதம் உயா்ந்துள்ளது.
இந்த அவல நிலைக்கு திமுக அரசின் தவறான நிதி மேலாண்மையே காரணம். இதேநிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டிலும் அரசு ஊழியா்களின் மாத ஊதியம் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்படலாம். இந்த தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு அமைந்தததும் தமிழ்நாட்டின் நிதிநிலையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
கடும் நிதி நெருக்கடியில் ஹிமாசல் அரசு: ஊதியம் கொடுக்க முடியாமல் திணறல்!

ரூ.5 லட்சம் கோடி கடன் குறித்து திமுக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்! - பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்

ஹரியாணா அரசின் வங்கிக் கணக்கில் ரூ.590 கோடி மோசடி: விரைவில் விசாரணையை தொடங்குகிறது சிபிஐ

வெப்ப அலையால் குழந்தைகள், முதியோருக்கு அச்சுறுத்தல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

