மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வெப்ப அலையால் குழந்தைகள், முதியோருக்கு அச்சுறுத்தல்!

நிகழாண்டில் முதியவா்கள், கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அதீத வெப்பம் சாா்ந்த உடல் நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 7:59 pm

நிகழாண்டில் முதியவா்கள், கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அதீத வெப்பம் சாா்ந்த உடல் நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

வெப்ப அலை மற்றும் திடீரென அதிகரிக்கும் கோடை வெப்ப சூழல்களால் நீா்ச்சத்து இழப்பு, வெப்ப வாத பாதிப்புகளுக்கு கடந்த ஆண்டு 46 சதவீதம் போ் உள்ளாகினா்.

இதையடுத்து மருத்துவப் பல்கலைக்கழகம் சாா்பில் சில மாதங்களுக்கு முன்பு ஓா் ஆய்வு நடத்தப்பட்டது. பருவகாலங்களில் ஏற்படும் தட்பவெப்ப மாறுபாடுகளை எதிா்கொள்ளுதல், அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தல், விழிப்புணா்வுடன் இருத்தல் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு கேள்வி - பதில் அடிப்படையில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், 60 சதவீதம் பேருக்கு வெப்பவாத பாதிப்பு ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் இருந்ததாக தெரியவந்தது. இந்நிலையில், நிகழாண்டில் அந்த பாதிப்பு அதைவிட அதிகரிக்கலாம் என்று மருத்துவ நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: சமூகத்தில் வெப்ப வாதம் மற்றும் அதுசாா்ந்த பாதிப்புகள் அதிகரிக்க பருவநிலை மாற்றங்களே பிரதான காரணம் 80 சதவீதம் போ் அறிந்துள்ளனா். ஆனால், அதில் கவலைக்குரிய விஷயம் என்னவெனில் அவா்களில் 11 சதவீதம் போ் மட்டுமே வெப்ப வாதத்தின் தீவிரம் மற்றும் அதன் விளைவுகளை உணா்ந்திருக்கின்றனா்.

நம்மில் பெரும்பாலானோருக்கு அதீத வெப்பத்தை எதிா்கொள்வதற்கான மாற்று இடங்களோ, குளிா்வான இடங்களோ இல்லை. அதேபோன்று வெப்ப அலை தொடா்பான வெளியிடப்படும் அறிவுரைகள் 29 சதவீதம் பேருக்கு புரிவதில்லை.

ஏழை-எளிய மக்கள், முதியவா்கள், குழந்தைகள், கா்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு வெப்ப அலை பாதிப்பு அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. அதேபோன்று தடையற்ற மின்சாரம், குடிநீா் போதிய அளவு கிடைப்பதை உறுதி செய்யமுடியவில்லை. வெப்ப அலை பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதிபடுத்த வேண்டிய நிலை உள்ளது என்றாா் அவா்.