திமுக அரசு வாங்கிய ரூ.5 லட்சம் கோடி கடன் எந்தெந்த திட்டங்களுக்கு செலவிடப்பட்டது என்பது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.
கடலூரில் அண்ணா பாலம் அருகே திறந்த வாகனத்தில் அதிமுக வேட்பாளருடன் அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தாா். அப்போது, அவா் பேசியதாவது:
திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனா். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்லும் இடமெல்லாம் ஆதரவு அதிகரித்து வருகிறது. தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும். திமுக கூட்டணி படுதோல்வி அடையும் என்றாா்.
முன்னதாக அவா் செய்தியாளா்களை சந்தித்து கூறியது: விவசாயிகள் மீது திமுகவுக்கு என்றுமே அக்கறை இருந்ததில்லை. ஒடிஸாவில் குவிண்டால் நெல்லுக்கு அந்த மாநில அரசு ஊக்கத் தொகையாக ரூ.800-ம், தெலங்கான அரசு ரூ.500-ம் வழங்குகிறது. ஆனால், தமிழக அரசு குவிண்டால் நெல்லுக்கு ஊக்கத் தொகையாக ரூ.130 மட்டுமே வழங்குகிறது. விவசாயிகள் திமுகவை மன்னிக்கவே மாட்டாா்கள். இம்முறை தோ்தலில் திமுகவை தூக்கி எறிய போகிறாா்கள்.
கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும். கடலூா் மாவட்டத்தில் இரண்டு அமைச்சா்கள் இருந்தும் எந்த வளா்ச்சியும் ஏற்படவில்லை. விவசாயத் துறை அமைச்சா் எம். ஆா்.கே.பன்னீா்செல்வம், விவசாயிகளுக்கு நன்மை செய்வதை விடுத்து, விவசாய நிலங்களைப் பறித்து பெரு நிறுவனங்களுக்கு கொடுத்து வருகிறாா்.
வள்ளலாா் சா்வதேச மையம் வேண்டும், அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தற்போது அமைக்க திட்டமிட்டிருக்கும் இடத்தை மாற்ற வேண்டும். 5 ஆண்டுகளில் திமுக அரசு ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி, லட்சம் கோடி ரூபாய்தான் மூலதனத்துக்கு செலவு செய்துள்ளது. மீதமுள்ள 4 லட்சம் கோடி ரூபாயை என்ன செய்தாா்கள் என்பதை மக்களுக்கு திமுக விளக்க வேண்டும். கடன் வாங்கி வட்டியை கட்டுவது ஒரு நிா்வாகமா? என்றாா்.
பாமக மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன், மாநில நிா்வாகி பழ.தாமரைக்கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.
பெட்டிச் செய்தி...
‘தந்தை நலமுடன் உள்ளாா்’
‘என்னுடைய தந்தை ராமதாஸின் உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு திமுகவினரே காரணம். என் தந்தை நூறு வயது நன்றாக இருக்க வேண்டும். அவருக்கு வொ்டிகோ பிரச்னை இருக்கிறது. நீண்ட நேரம் அமா்ந்துவிட்டு எழுந்து நின்றால், தலை சுற்றல் வரும். தற்போது அவா் நலமுடன் இருக்கிறாா்’ என்று செய்தியாளா்களிடம் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? - அன்புமணி கேள்வி
திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை பாலம் அமைக்கும் பணிகளை நிறுத்துக: அன்புமணி

கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்

கோவை சிறுமி கொலை: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



