மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

1,033 வேட்பாளர்கள்! தேர்தல் சீர்திருத்தத்துக்கு வித்திட்ட மொடக்குறிச்சி!

மொத்தம் 1,033 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் தேர்தல் ஆணையம் திகைத்துப் போய் மொடக்குறிச்சி தொகுதிக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைத்தது.

News image

சட்டப்பேரவைத் தேர்தல் - பிரதிப் படம்

Updated On :21 மார்ச் 2026, 7:35 am

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியில் 1033 பேர் போட்டியிட்டது தேசிய அளவில் தேர்தல் சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் கொண்டுவர காரணமாக அமைந்தது.

கடந்த 1996 சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மொடக்குறிச்சி தொகுதியில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாய சங்கங்களின் சார்பில் 1000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறங்கினர். திமுக, அதிமுக சார்பிலும் வேட்பாளர்கள் களம் கண்டனர். மொத்தம் 1,033 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் தேர்தல் ஆணையம் திகைத்துப் போய் அந்த ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைத்தது.

மொடக்குறிச்சி தொகுதியில் தேர்தலுக்கு மட்டுமே சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, 1,033 வேட்பாளர்களின் பெயர்களை உள்ளடக்கிய 120 பக்கம்கொண்ட வாக்குப் பதிவு புத்தகம் அச்சடிக்கப்பட்டது. வாக்காளர் ஒவ்வொருவருக்கும் வாக்குப் பதிவு அன்று ஒரு வாக்குப் பதிவு புத்தகம் கொடுக்கப்பட்டது. அதில் வாக்காளர்கள் தங்களுக்கு பிடித்த வேட்பாளர்கள் எந்தப் பக்கத்தில் இருக்கிறார்கள் என்பதைத் தேடிக் கண்டறிந்து வாக்களித்தனர்.

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட 1,033 வேட்பாளர்களில் 1,030 பேர் வைப்புத்தொகையை இழந்தனர். 88 பேர் ஒரு வாக்குகூட வாங்கவில்லை. 158 பேர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றனர். திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் 64,436 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்திய அளவில் இந்தத் தேர்தல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றால், போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க முடியாமல், தேர்தல் ஆணையம் திணறியது.

இதன்பிறகே, அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதை தவிர்க்கும் விதமாக தேர்தல் ஆணையம் பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. குறிப்பாக, வேட்பாளர்களின் வைப்புத்தொகையை அதிகப்படுத்தியது. மேலும் தேர்தலில் போட்டியிடுபவர்களை அந்தத் தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டது. நாடுதழுவிய அளவில் தேர்தல் சீர்திருத்தம் கொண்டுவர முக்கியக் காரணமாக மொடக்குறிச்சி தொகுதி தேர்தல் அமைந்தது.

Summary

Modakurichi constituency that paved the way for electoral reform!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.