சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் போலீஸ் விசாரணையில் ஆகாஷ் உயிரிழந்த சம்பவத்தில் காவல் துறையினர் 11 பேருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
மானாமதுரையில் ஜெயக்குமாா், அழகர் ஆகிய இருவரும் வாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் கைது செய்யப்பட்டார். போலீஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது இவருக்கு கால் முறிவு ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இவர் கடந்த 8-ஆம் தேதி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, ஆகாஷ் உயிரிழப்புக்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்து 5 நாள்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
பின்னர், இந்த விவகாரத்தில் மானாமதுரை காவல் நிலையத்தில் பொறுப்பு ஆய்வாளராகப் பணியாற்றிய திலீபன், உதவி ஆய்வாளர் குகன், போலீஸார் தெய்வேந்திரன், காளீஸ்வரன், சரத்குமார், மனோகரன் ஆகிய 6 பேர் கடந்த வெள்ளிக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, மானாமதுரை காவல் ஆய்வாளா் குமாரவேல் பாண்டியனை, நெல்லை காவல் சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்து தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திரபிதாரி உத்தரவிட்டார். இதேபோல, தனிப்பிரிவு காவலா் முனீஸ், மதுரை மாவட்டத்துக்கும்பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மானாமதுரை டிஎஸ்பி ராஜா, தனிப்பிரிவு எஸ்ஐ முத்துராஜா, காவலர் முத்துப்பாண்டி உள்ளிட்ட 11 பேருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், விசாரணையின் அடிப்படையில் மற்றவர்களை வழக்கில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
The CBCID police have summoned 11 police officers in connection with the incident in which Akash died during a police investigation in Manamadurai, Sivaganga district.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆகாஷ் உயிரிழந்த விவகாரம்: காவல் ஆய்வாளா் நெல்லைக்கு மாற்றம்

மானாமதுரை இளைஞா் உயிரிழந்த வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

மானாமதுரை இளைஞா் உயிரிழந்த விவகாரம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிய உத்தரவு

போலீஸ் காவலில் இளைஞா் உயிரிழந்த சம்பவம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



