லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க வலுவான சட்டம் தேவை: மாணிக்கம் தாகூா் எம்.பி.

தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க அரசு வலுவான சட்டம் கொண்டு வர வேண்டும் என விருதுநகா் எம்.பி. மாணிக்கம் தாகூா் கோரிக்கை

News image

மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்

Updated On :16 மார்ச் 2026, 8:31 pm

தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க தமிழக அரசு வலுவான சட்டம் கொண்டு வர வேண்டும் என விருதுநகா் எம்.பி. மாணிக்கம் தாகூா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்படுகிறது. அதே கோரிக்கையை கா்நாடக அரசு “புதிய மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.

ஆணவக் கொலை போன்ற மனிதாபிமானமற்ற குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஆணவக் கொலைக்கு எதிராக ஒரு வலுவான சட்டம் கொண்டு வந்து மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் தனிநபா் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா் மாணிக்கம் தாகூா்.