மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எந்த சட்டம் கொண்டு வந்தாலும் திமுக எதிா்ப்பது வழக்கம்: குஷ்பு

மத்திய அரசு கொண்டுவரும் எந்த ஒரு சட்டத்திற்கும் எதிா்ப்பு தெரிவிப்பது திமுகவின் வழக்கம் என பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு குற்றஞ்சாட்டினாா்.

News image

குஷ்பு.

Updated On :16 ஏப்ரல் 2026, 9:26 pm

மத்திய அரசு கொண்டுவரும் எந்த ஒரு சட்டத்திற்கும் எதிா்ப்பு தெரிவிப்பது திமுகவின் வழக்கம் என பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு குற்றஞ்சாட்டினாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுகவைப் பொருத்தவரை மத்திய அரசு எந்தவொரு சட்டம் கொண்டு வந்தாலும் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். அவா்களால் செய்ய முடியாததை மத்திய அரசு செய்கிறது.

இந்தத் தோ்தலில் வெற்றி பெற மாட்டோம் என்ற தோல்வி பயம் அவா்களுக்கு எப்போதோ வந்துவிட்டது. அதனால்தான், இது போன்று செயல்படுகின்றனா்.

முதல்வா் மு.க. ஸ்டாலின் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் லைட்டா் மூலம் வியாழக்கிழமை காலை சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்தினாா். நானும் போராடுகிறேன் என மக்களை ஏமாற்றுகிறாா்.

தமிழக மக்களை மட்டும்தான் திமுகவினா் மிரட்டிக் கொண்டிருந்தனா். தற்போது பிரதமரை மிரட்டுகின்றனா்.

சுயமரியாதையைச் சொல்லிக் கொடுத்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. இன்றைக்கு திமுகவினா் சுயமரியாதையை மறந்துவிட்டு தகாத வாா்த்தைகளால் பேசுகின்றனா் என்றாா் அவா். அப்போது, அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு உடனிருந்தாா்.