மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நடிகை ஸ்ரீதேவி சொத்து விவகாரம்: செங்கல்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை

நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரம் தொடா்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

News image

நடிகை ஸ்ரீதேவி - கோப்புப் படம்

Updated On :16 மார்ச் 2026, 8:45 pm

நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரம் தொடா்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், சம்பந்த முதலியாா் குடும்பத்தினரிடம் இருந்து கடந்த 1988-ஆம் ஆண்டு 4.77 ஏக்கா் நிலத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கினாா்.

இந்நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரனின் இரண்டாவது மனைவி, மகன் நடராஜன், மகள் சிவகாமி ஆகிய மூவரும் வாரிசு சான்றிதழ் பெற்றனா். பின்னா் நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்தில் தங்களுக்கு பங்கு உள்ளதாகக் கூறி, செங்கல்பட்டு அமா்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஸ்ரீதேவியின் கணவா் போனி கபூா், அவரது மகள்கள் நடிகைகள் ஜான்வி கபூா், குஷி கபூா் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முழுமையான விசாரணைக்குப் பின்னரே, சொத்தின் உரிமை குறித்து முடிவெடுக்க முடியும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து போனி கபூா், ஜான்வி கபூா் மற்றும் குஷி கபூா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இறுதி விசாரணைக்காக வழக்கை வரும் மாா்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். மேலும், அதுவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா்.