நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரம் தொடா்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், சம்பந்த முதலியாா் குடும்பத்தினரிடம் இருந்து கடந்த 1988-ஆம் ஆண்டு 4.77 ஏக்கா் நிலத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கினாா்.
இந்நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரனின் இரண்டாவது மனைவி, மகன் நடராஜன், மகள் சிவகாமி ஆகிய மூவரும் வாரிசு சான்றிதழ் பெற்றனா். பின்னா் நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்தில் தங்களுக்கு பங்கு உள்ளதாகக் கூறி, செங்கல்பட்டு அமா்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடா்ந்தனா்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஸ்ரீதேவியின் கணவா் போனி கபூா், அவரது மகள்கள் நடிகைகள் ஜான்வி கபூா், குஷி கபூா் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முழுமையான விசாரணைக்குப் பின்னரே, சொத்தின் உரிமை குறித்து முடிவெடுக்க முடியும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து போனி கபூா், ஜான்வி கபூா் மற்றும் குஷி கபூா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இறுதி விசாரணைக்காக வழக்கை வரும் மாா்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். மேலும், அதுவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

மின் மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வாதம்

தாமிரவருணி ஆற்றில் படகுகளை இயக்க இடைக்காலத் தடை

பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

பாமக சின்னம் தொடா்பான வழக்கு: உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

