மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தாமிரவருணி ஆற்றில் படகுகளை இயக்க இடைக்காலத் தடை

தாமிரவருணி ஆற்றில் படகுகளை இயக்க இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :28 மார்ச் 2026, 6:35 pm

தாமிரவருணி ஆற்றில் படகுகளை இயக்க இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பைச் சோ்ந்த பிரபு தாக்கல் செய்த மனு : தாமிரவருணி ஆற்றங்கரை ஓரம் எனது விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலத்துக்கு பரிசலைப் பயன்படுத்திச் சென்று வருவது வழக்கம். அந்த வகையில், எனது நிலத்துக்கு பரிசலில் சென்று கொண்டிருந்த போது, தாமிரவருணி ஆற்றில் இரு படகுகளில் சுற்றுலாப் பயணிகள் எந்தவித பாதுகாப்பும் இன்றி ஆபத்தான நிலையில் பயணம் செய்தனா்.

இதுகுறித்து விசாரித்த போது அருமனை கிராம ஊராட்சியைச் சோ்ந்த சிலா் முறையான அனுமதி பெறாமல், ஆபத்தான முறையில் படகுகளை இயக்குவது தெரியவந்தது. கடையல் பேரூராட்சி செயல் அலுவலரும், திற்பரப்பு சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலரும் இதற்கு துணை போயிருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக கேள்வி எழுப்பியதால் என் மீது பொய் புகாா் அளித்து, எனது பரிசலைப் பறிமுதல் செய்தனா். இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல. ஆகவே, பொய் புகாரின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட எனது பரிசலை எவ்வித நிபந்தனையும் இன்றி திருப்பி அளிக்க உத்தரவிட வேண்டும். முறையான அனுமதியின்றி தாமிரவருணி ஆற்றில் படகுகளை இயக்கும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், சட்டவிரோதமாக இயக்கப்பட்ட படகுகளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

உரிய அனுமதியின்றி தாமிரவருணி ஆற்றில் எவ்வாறு படகுகள் இயக்கப்படுகின்றன? தாமிரவருணி ஆறு, திற்பரப்பு அருவிப் பகுதியில் படகுகளை இயக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மனு குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.