திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

எரிவாயு தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி

மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என பிரதமர் பேசியது குறித்து...

News image

பிரதமர் நரேந்திர மோடி - படம் - யூடியூப் / Narendra Modi

Updated On :11 மார்ச் 2026, 2:11 pm

மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

திருச்சி மாவட்டம் பஞ்சபூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 11) கலந்துகொண்டு உரையாற்றினார்.

கூட்டத்தில், திமுக ஆட்சியை விமர்சித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து மேற்காசிய போர் விவகாரம் குறித்தும் அதனால், நாட்டில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் பிரதமர் பேசியதாவது:

''மேற்காசியாவில் நடக்கும் போரால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். இந்தப் போரானது சர்வதேச அளவில் ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியையும் பாதித்துள்ளது. அத்தியாவசிய தேவை விநியோகத்திலும் இவை எதிரொலித்துள்ளன.

எந்தவொரு சூழலிலும் இந்திய மக்களின் நலனுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும். வதந்திகளை நம்ப வேண்டாம். உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே பகிர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் நாம் எத்தகைய சிறந்த தேசம் என்பதை உலக நாடுகளுக்கு நிரூபித்தோம். அதேபோன்று இந்த சூழலையும் வெற்றிகரமாகக் கடந்து செல்வோம்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. வளர்ச்சி, நாணயமான உழைப்பை நோக்கி ஒரு பாதை அழைத்துச் செல்கிறது. மோசடி, போதைப் பொருள், ஏமாற்றத்தை நோக்கி மற்றொரு பாதை (திமுக) அழைத்துச் செல்கிறது.

மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. நாம் அனைவரும் இணைந்து வளமான தமிழகத்தை உருவாக்குவோம். நாம் அனைவரும் இணைந்து வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவோம்.

தமிழ்நாடு மாற்றத்தை விரும்புகிறது. தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது'' என பிரதமர் மோடி பேசினார்.

Summary

Gas shortage People should not panic Prime Minister Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.