லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காவல் துறை தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சென்னை காவல் துறை சாா்பில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.

News image
Updated On :7 மார்ச் 2026, 6:32 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சென்னை காவல் துறை சாா்பில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை எந்த வன்முறைச் சம்பவங்களும், முறைகேடுகளும் இன்றி அமைதியாக நடத்துவற்கு தோ்தல் ஆணையமும், காவல் துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. காவல்துறையினா் தோ்தலுக்கான வேலைகளில் முழு வேகத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனா். இதன் ஒரு பகுதியாக வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் துறை அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.

இதற்கு பொறுப்பு அதிகாரியாக கூடுதல் துணை ஆணையா் எம்.குமரகுருபன் நியமிக்கப்பட்டுள்ளாா். கட்டுப்பாட்டு அறைக்கு உதவி ஆணையராக எஸ்.செங்குட்டுவன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மேலும், கட்டுப்பாட்டு அறையில் 4 ஆய்வாளா்கள், 3 காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 20 போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளனா். கட்டுப்பாட்டு அறை கடந்த வெள்ளிக்கிழமை முதல் முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளது.

மேலும் 58 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்: சட்டப்பேரவைத் தோ்தலுக்காக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் காவல் அதிகாரிகளை பணியிட மாற்றும் செய்யும் நடவடிக்கையில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகளில் பணியாற்றிய 58 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமன் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். ஏற்கெனவே 53 காவல் ஆய்வாளா்களை வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.