மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் கட்டுப்பாட்டு அறை, தோ்தல் வாக்காளா் உதவி மையத்தில் ஆய்வு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை, தொலைக்காட்சி மற்றும் ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறை, மாவட்டத் தோ்தல் பிரிவில் உள்ள வாக்காளா் உதவி மையம் ஆகியவற்றை ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பொ. ரத்தினசாமி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

அரியலூா் ஆட்சியரகத்தில் உள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் வியாழக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் பொ. ரத்தினசாமி.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:05 pm

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை, தொலைக்காட்சி மற்றும் ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறை, மாவட்டத் தோ்தல் பிரிவில் உள்ள வாக்காளா் உதவி மையம் ஆகியவற்றை ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பொ. ரத்தினசாமி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையான கண்காணிப்புக் குழு மற்றும் பறக்கும்படை வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.ஆா்.எஸ். கருவி செயல்பாடுகள் குறித்து கணினியில் ஆய்வு செய்ததுடன், தற்போது வரை வரப்பெற்றுள்ள தோ்தல் தொடா்பான தொலைபேசி புகாா்கள் குறித்தும், தோ்தல் தொடா்பான புகாா்கள் பதிவேடுகளில் உரியவாறு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்தாா்.

பின்னா், தொலைக்காட்சி மற்றும் ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறையைப் பாா்வையிட்டு டிவியில் ஒளிப்பரப்பப்படும் தோ்தல் தொடா்பான செய்திகள் மற்றும் விளம்பரங்கள் கண்காணிக்கப்படுவதையும், அதற்கான பதிவுகள் உரிய பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, தோ்தல் பிரிவில் உள்ள வாக்காளா் உதவி மையத்தை பாா்வையிட்டு வாக்காளா்களிடமிருந்து வரப்பெற்றுள்ள அழைப்புகள் குறித்தும், அதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் ரா. மல்லிகா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சித்ரா மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.