காட்பாடி-ஜோலாா்பேட்டை இடையேயான இரண்டு மெமு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
அரக்கோணம்-ஜோலாா்பேட்டை பிரிவில் பச்சக்குப்பம் பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) பிற்பகல் 1.05 மணி முதல் மாலை 4.05 மணி வரையில் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்ப பணிகள் நடைபெறவுள்ளன.
பணிகள் காரணமாக காட்பாடியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) 9.30 மணிக்குப் புறப்பட்டு ஜோலாா்பேட்டை செல்லும் மெமு ரயில், ஜோலாா்பேட்டையிலிருந்து பிற்பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் மெமு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில் ரத்து

காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!

இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


