சமூக ஊடகங்களில் கிடைக்கும் லைக்குகளும், ஷேர்களும் வாக்குகளாக மாறாது என்று பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ல் திரைப்புக்கு அப்பால் உங்கள் குரல் என்ற தலைப்பில் பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்புவும், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இதில், உரையைத் தொங்கிய குஷ்பு பேசியதாவது:
”நான் என்னை திரைத் துறையை சார்ந்தவராகவோ அரசியல்வாதியாகவோ நினைக்கவில்லை. நான் சார்ந்த சமூகத்தின் அங்கமாகவே எண்ணுகிறேன். பெண்கள், குழந்தைகள் சார்ந்த பிரச்னைகளில் நான் சார்ந்த கட்சியை கடந்தும் கருத்து தெரிவித்துள்ளேன்.
என்னுடைய மனசாட்சிக் உண்மையாக இல்லையென்றால் என்னால் தூங்க முடியாது வாழவும் முடியாது” என்றார்.
தொடர்ந்து பேசிய தனஞ்செயன் பேசியதாவது:
“தமிழ்நாட்டில் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது. சினிமாவில் சாதித்தவர்கள்கள் அரசியலை சாதித்துள்ளார்கள். 2026 தேர்தலில் ஒருவரின் வருகையால் ஒட்டுமொத்த நிலைமையும் மாறியுள்ளது. விஜய்க்கு 15 சதிவீதம் கிடைக்குமா? 30 சதவீதம் கிடைக்குமா? என்று விவாதம் நடக்கிறது. அரசியல் கட்சிகள் கூட பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். விஜய் பெரும் வாக்கு சதவீதம் விளைவை ஏற்படுத்தலாம். மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் சினிமா மிகவும் சக்தி வாய்ந்தது. சமூக ஊடகங்கள் முழுவதும் எனது வாக்கு விஜய்க்கு என்று இளைஞர்கள் கூறுகிறார்கள்.” என்றார்.
இதனைத் தொடர்ந்து குஷ்பு பேசியதாவது:
“நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என அனைவரும் சமூக ஊடகத்தில் கட்டமைக்கப்படவில்லை. அவர்களின் கட்சியை கட்டமைத்தார்கள்.
சமூக ஊடகங்களில் கிடைக்கும் லைக், சேர்கள் ஒருபோதும் வாக்காக மாறாது. உதாரணம் கமலஹாசன். அவர் தேர்தலில் வெற்றி பெறவில்லை. ஆந்திரத்தில் சிரஞ்சீவியின் முதல் கூட்டத்துக்கு 5 லட்சம் பேர் வந்தார்கள். ஆனால் அவர் தேர்தலில் தோற்றார். மக்களுக்காக அவர் என்ன கொடுக்கப் போகிறார் என்றுதான் பார்ப்பார்கள். அதிகபட்சம் 15, 16 சதவீத வாக்குகளை மட்டுமே பெறுவார். அதனால் அரசமைக்கும் கட்சிக்கு இடையூறு ஏற்படுமா? யாருக்கு ஏற்படும்? என்பதை தான் பொறுத்திருந் பார்க்க வேண்டும்.
இன்ஸ்டாகிராமில் பேசுபவர்கள் காலை 6 மணிக்கு எழுந்து சென்று வாக்கா மாட்டார்கள். வாக்கு செலுத்தாத மக்களுக்கு எந்த அரசாங்கம் அமைத்தாலும் ஏன் தண்ணீர் வரவில்லை? சாலை சரியில்லை? என்று கேள்வி கேட்கும் உரிமை கிடையாது.
தெருவும் சென்று வேலை பார்த்தால்தான் மக்கள் உங்களுக்கு வாக்கு செலுத்துவார்கள். எம்ஜிஆர் படுக்கையில் படுத்தபடி வெற்றி பெற்றார் என்பது கிடையாது. அவர் மக்களுக்காக வேலை செய்துள்ளார். மக்களுடன் தொடர்பு இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.” எனத் தெரிவித்தார்.
Summary
Insta likes doesn't turn into votes! Khushbu criticizes Vijay!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு நிறைவு!

பள்ளி, கல்லூரிகளில் குடிமைப் பணி விழிப்புணர்வு தேவை: அண்ணாமலை

ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் புதிய எழுச்சி: பழனிவேல் தியாகராஜன்

சமூக ரீதியாக பின்தங்கியுள்ளது குஜராத்: ஜான் பிரிட்டாஸ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



