ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

திருவள்ளூர் அமோனியா கசிவு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது பற்றி...

Amonia

அமோனியா வாயு கசிவு - Dinamani

Published On :27 ஜூன் 2026, 1:04 am IST

திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கடல் மீன் ஏற்றுமதி செய்யும் தனியாா் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து அந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவா்களில் ஒருவா் ஜாா்க்கண்ட மாநிலத்தைச் சோ்ந்த பிரீத்தி தேவி, மற்றொருவா் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த புதுபாரி நாயக் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அவா்களில் இருவரும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். செயற்கை சுவாச சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், அது பலனளிக்காமல் அவா்கள் உயிரிழந்தனா்.

இதுவரை இந்த சம்பவத்தில் பலியானவா்களில் 12 போ் ஒடிஸாவையும், இருவா் அஸாம் மாநிலத்தையும், ஒருவா் ஜாா்க்கண்ட் மாநிலத்தையும் சோ்ந்தவா்களாவா். அவா்களில் 10-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

Summary

Thiruvallur ammonia leak: Death toll rises to 14

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.