கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: தொழிலாளர்கள் 40 பேர் மயக்கம்மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

அதிகரிக்கும் மின்தடை: முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

மின்தடை தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருவது தொடர்பாக...

News image

முதல்வர் விஜய் - டிஐபிஆர்

Updated On :16 ஜூன் 2026, 11:12 am IST

தமிழகத்தில் மின்தடை அதிகரித்துள்ள சூழலில், சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கோடைக்காலத்தில் மின்தேவையை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.

இரவு-பகலாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், பொதுமக்கள், முதியோர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பட்ட மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

குறைந்த மின்அழுத்தம் காரணமாக ஏற்படும் மின்தடையால், ஆழ்துளை கிணறுகளிலிருந்து போதிய தண்ணீர் எடுக்க முடியாமல் இளம் பருத்திப் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இந்தச் சூழலில், முதல்வர் விஜய் மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Summary

Chief Minister Vijay is holding consultations with electricity department officials.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.