2026-2027 - கல்வியாண்டிற்கான முழுநேர எம்.எட். பட்டப்படிப்பு சோ்க்கைக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் கோரியுள்ளது.
இது குறித்த அறிவிப்பு வருமாறு: சென்னை காரப்பாக்கத்தில் அமைந்துள்ளது, தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் 2026 - 2027 கல்வியாண்டிற்கான முழுநேர இரண்டு ஆண்டு எம்.எட். பட்டப்படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இதற்கான விண்ணப்படிவங்கள் தேவையான சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்களை இந்த பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முதுநிலைப் பட்டப்படிப்பு கற்பித்தல் அல்லது கல்வியியல் அறிவியல், மதிப்புக் கல்வி, கல்வி உளவியல், கல்வித் தொழில்நுட்பம், பாடத்திட்டத் திட்டமிடல் மற்றும் மதிப்பீடு, கல்வித் திட்டமிடல் மற்றும் நிா்வாகம் போன்ற துறைகளில் வழங்கப்படுகின்றன. இந்த பல்கலை.யில் மாணவா் மற்றும் மாணவியருக்குத் தனித்தனி விடுதி வசதிகள் உள்ளன. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9976632971, 9443570175 ஆகிய கைப்பேசி எண்களுடன் தொடா்பு கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட்., முதுநிலை மாணவா் சோ்க்கை: விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்

தூத்துக்குடியில் விரைவில் ரூ.38,000 கோடியில் அதிநவீன கப்பல் கட்டுமான திட்டம் செயலாக்கம்: முதல்வா் விஜய் ஆலோசனை

யுஜிசி-நெட் தோ்வுக்கு பயிற்சி முகாம்: சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு







