பெரம்பலூர் அருகே, கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தினால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சங்கர், அரியலூரைச் சேர்ந்த விஜய் உள்ளிட்ட 3 பேர் பலியாகினர். மற்றொரு நபரின் அடையாளம் காணப்படவில்லை.
பெரம்பூரைச் சேர்ந்த சங்கர், தன்னுடைய நண்பர்களான அரியலூர் மாவட்டம் அண்ணாசிநல்லூரைச் சேர்ந்த விஜய் உள்ளிட்ட நண்பர்களுடன் காரில் பெரம்பலூர் அருகே துரையூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து நேரிட்டது.
இதில் காரில் வந்த மூவரும் பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மூவரின் உடல்களைக் கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









