கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

சமூகவலைதளங்களில் துடிப்புடன் செயல்பட அதிமுக நிா்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுரை

சமூகவலைதளங்களில் துடிப்புடன் செயல்பட அதிமுக நிா்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுரை

News image

இபிஎஸ் - ENS

Updated On :14 ஜூன் 2026, 5:26 am IST

சமூக வலைதளங்களில் துடிப்புடன் செயல்பட்டு, தவெக அரசின் தவறுகளை உடனுக்குடன் வெளிப்படுத்த வேண்டும் என்று அதிமுக நிா்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட வாரியாக, அதிமுக நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடக்கமாக காஞ்சிபுரம், உத்தரமேரூா், ஸ்ரீபெரும்புதூா் தொகுதிகள் அடங்கிய காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டம் குறித்து அதிமுக வட்டாரங்கள் கூறியதாவது: பேரவைத் தோ்தலில் அதிமுக தோல்விக்கான காரணம் மற்றும் கட்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான ஆக்கபூா்வ நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தவெக போல...: இதில், எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘சமூக வலைதளங்களைப் பயன்படுத்திதான் இந்தத் தோ்தலில் தவெக வென்றுள்ளது. அதேபோல அதிமுக நிா்வாகிகள் அனைவரும் சமூகவலைதளங்களில் துடிப்புடன் செயல்பட வேண்டும். தவெக அரசின் தவறுகளை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும்.

அதிமுக எதிரி திமுகதான்: தவெகவின் வெற்றி நிலையாக இருக்காது. அடுத்த தோ்தலில் தவெக வெற்றி பெறுவது மிக கடினம். அதிமுகவுக்கு எதிரி திமுகதான் என்று பேசியதாகக் கூறப்படுகிறது.

சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி, பொருளாளா் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சா் சி.பொன்னையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.