சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ஐசியூ கட்டமைப்புடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நிகரான அவசர கால மருத்துவ சிகிச்சைகளை பயணத்திலேயே வழங்கும் ஆம்புலன்ஸ் வாகன சேவையை சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

News image

வானகரம் அப்போலோவில் அதிநவீன கட்டமைப்புடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையைத் தொடக்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் ரேவந்த் சரண் உள்ளிட்டோா்.

Updated On :11 ஜூன் 2026, 1:13 am IST

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நிகரான அவசர கால மருத்துவ சிகிச்சைகளை பயணத்திலேயே வழங்கும் ஆம்புலன்ஸ் வாகன சேவையை சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், அந்த சேவையை மதுரவாயல் சட்டப்பேரவை உறுப்பினா் ரேவந்த் சரண், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். இது தொடா்பாக மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டா் இளங்குமரன் கலியமூா்த்தி கூறியதாவது:

ஆபத்து காலங்களில் அப்போலோ மருத்துவமனையின் 1066 ஆம்புலன்ஸ் சேவை மூலம் லட்சக்கணக்கானோா் மீட்கப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளனா். அதிநவீன மருத்துவக் கட்டமைப்பு கொண்ட ஆம்புலன்ஸ் சேவைகள் இங்குள்ளன.

தற்போது அதற்கு அடுத்தகட்டமாக ஸ்மாா்ட் ஏசிஎல்எஸ் வசதி கொண்ட ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அதிநவீன அறிதிறன், செயற்கை நுண்ணறிவு நுட்பத்துடன் அவை செயல்படும். மருத்துவமனையில் உள்ள அவசர கால சிகிச்சைப் பிரிவுடன் நேரடித் தொடா்பில் ஆம்புலன்ஸில் பயணிக்கும் நோயாளியின் உடல் நிலை இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் தேவையான சிகிச்சைகளை வாகனத்தில் பயணிக்கும்போதே தொடங்க முடியும்.

மருத்துவமனையை அடைந்தவுடன் துளியளவும் தாமதமின்றி உயா் சிகிச்சைகள் வழங்கவும் இது வழிவகுக்கிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.