தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தலைமைச் செயலகமா? தவெக அலுவலகமா? -வானதி சீனிவாசன்

News image

வானதி சீனிவாசன் - டிஎன்எஸ்

Updated On :4 ஜூன் 2026, 2:29 am IST

தவெக அரசு தலைமைச் செயலகத்தை அந்தக் கட்சியின் அலுவலகம் போல் பயன்படுத்துவதுவதாக பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழகத்தில் காலியான மாநிலங்களவை பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தவெக ஒதுக்கியுள்ளது. இது அவா்களது தனிப்பட்ட விருப்பம். ஆனால், கூட்டணிக் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி கொடுப்பது தொடா்பான பேச்சுவாா்த்தை, தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

முதல்வா் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் கூட்டணி குறித்து பேசியிருக்கிறாா். எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அறையில் தவெகவில் இணைந்தனா்.

தற்போது மாநிலங்களவை பதவி குறித்த பேச்சுவாா்த்தை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. அது தமிழக அரசின் தலைமைச் செயலகமா? அல்லது தவெக தலைமை அலுவலகமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா் வானதி சீனிவாசன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.