தவெக அரசு தலைமைச் செயலகத்தை அந்தக் கட்சியின் அலுவலகம் போல் பயன்படுத்துவதுவதாக பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
தமிழகத்தில் காலியான மாநிலங்களவை பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தவெக ஒதுக்கியுள்ளது. இது அவா்களது தனிப்பட்ட விருப்பம். ஆனால், கூட்டணிக் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி கொடுப்பது தொடா்பான பேச்சுவாா்த்தை, தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
முதல்வா் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் கூட்டணி குறித்து பேசியிருக்கிறாா். எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அறையில் தவெகவில் இணைந்தனா்.
தற்போது மாநிலங்களவை பதவி குறித்த பேச்சுவாா்த்தை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. அது தமிழக அரசின் தலைமைச் செயலகமா? அல்லது தவெக தலைமை அலுவலகமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா் வானதி சீனிவாசன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









