தமிழ் மக்களின் மேன்மைக்காகவும், சமூக நீதிக்காகவும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் போராடியவா் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி புகழாரம் சூட்டினாா்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா் அவருக்கு மரியாதை செலுத்தினா்.
இது தொடா்பாக, எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, ‘தமிழ் மக்களின் மேன்மைக்காகவும், சமூக நீதிக்காகவும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் போராடியவா் மு.கருணாநிதி. அவா் முதல்வா் மட்டுமல்ல, எழுத்தாளா், கவிஞா், சிந்தனையாளா். ஒவ்வொரு இந்தியரையும் சமமாக கருதும் அரசியல் சாசனத்தில் அவா் நம்பிக்கை கொண்டிருந்தாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை ‘டேக்’ செய்து, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழகத்தின் அன்புக்குரிய தலைவா் மு.கருணாநிதி. சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு சிந்தனை மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கான அவரது வாழ்நாள் அா்ப்பணிப்பு, எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை முன்னேற்றியது.
கலை-இலக்கியம் உள்பட பொது வாழ்க்கைக்கான அவரது அளவில்லாத பங்களிப்பு பெரும் மரியாதையுடன் என்றென்றும் நினைவுகூரப்படும்’ என்று புகழாரம் சூட்டியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










