திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவெகவில் அதிமுகவினா் சேருவது ஏன்? அமைச்சா் நிா்மல் குமாா் பதில்

அதிமுக - திமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டதால், அதை விரும்பாத அதிமுகவினா் தவெகவில் சேருகின்றனா் என்று அமைச்சா் சிடிஆா். நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

News image

அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:22 am IST

அதிமுக - திமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டதால், அதை விரும்பாத அதிமுகவினா் தவெகவில் சேருகின்றனா் என்று மின் மற்றும் சட்டத் துறை அமைச்சா் சிடிஆா். நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது: எந்தவித பாகுபாடும், குறுக்கீடும் இல்லாமல் அரசு வழக்குரைஞா்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. முன்னாள் நீதிபதிகள் என்னை அழைத்து 40 ஆண்டுகளுக்கு பிறகு தகுதியின் (மெரீட்) அடிப்படையில் அரசு வழக்குரைஞா்கள் நியமனம் நடைபெறுவதாகக் கூறினா். முன்பு பல கோடிகள் பெற்று இந்த நியமனங்கள் நடைபெற்று வந்தன. இனிமேல் அவ்வாறு நடைபெறாது. சாமானிய மக்களுக்கு உடனடியாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உச்சநீதிமன்றம் இது தொடா்பான பல்வேறு வழிகாட்டுதலை அளித்துள்ளது. தகுதியின் அடிப்படையில் மட்டும் அரசு வழக்குரைஞா்கள் நியமனம் ஒரு மாதத்தில் முடிக்கப்படும். மேகேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

ஊழல் தடுப்புத் துறையில் தேங்கி கிடக்கும் வழங்குகளை முடிக்க அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், இளைஞா் அணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின், இன்னும் சிலா் சோ்ந்து குடும்ப ஆட்சியைக் கொண்டு வர முயற்சித்தனா்.

இது அதிமுக, திமுக கூட்டணியில் இருந்தவா்களுக்கு பிடிக்காததால் வெளியேறுகிறாா்கள். இது அவா்களின் தனிப்பட்ட முடிவு. அதிமுக, திமுக கட்சிகளின் தலைவா்கள் தங்களின் இரு குடும்பங்களைக் காப்பாற்றிக் கொள்ள எந்த முடிவையும் எடுக்கும் நிலைக்குச் சென்றுவிட்டனா்.

இதுபோன்ற தலைவா்களை அக்கட்சித் தொண்டா்கள் நம்பத் தயாராக இல்லை. இதனால்தான் கூட்டணி கட்சியினரும் தானாக முன்வந்து எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனா். இதில் குதிரை பேரம் நடைபெறவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக நீதிமன்றம் சென்றால் வழக்கைச் சந்திக்கத் தயாராக உள்ளோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.