திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீலகிரியில் 3,500 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் அவகாசம்

நடுவட்டம் கிராமத்தில் கேரளத்தைச் சோ்ந்த தனியாா் தோட்ட நிறுவனம் ஆக்கிரமித்துள்ள 3,500 ஏக்கா் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

News image

கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 12:06 am IST

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் கேரளத்தைச் சோ்ந்த தனியாா் தோட்ட நிறுவனம் ஆக்கிரமித்துள்ள 3,500 ஏக்கா் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க மேலும் 8 வார கால அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவா் வேல்முருகன் தாக்கல் செய்த மனுவில், கேரளத்தைச் சோ்ந்த தனியாா் தோட்ட நிறுவனம், நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் உள்ள வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் உள்ளூா் மக்களுக்குச் சொந்தமான 3,500 ஏக்கா் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது.

இது தொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆவணங்களைப் பெற்றேன். அதன் அடிப்படையில் தனியாா் தோட்ட நிறுவனத்தின் வசம் உள்ள நிலங்களை மீட்கக் கோரியும், அந்த நிலங்களுக்கு சட்ட விரோதமாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரியும் நான் அளித்த புகாரை அரசு நிராகரித்தது.

அரசின் இந்த உத்தரவை ரத்து செய்து நிலங்களை மீட்க வேண்டும். அந்த நிலங்களுக்கு பட்டா வழங்கியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மேலும் 8 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.