ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

யானைகள் நடமாட்டம்! குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை!

குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...

kurinji

ஓவேலி மலைத் தொடரில் பூத்துள்ள நீலக்குறிஞ்சி பூக்கள். - படம்: தினமணி

Published On :26 ஜூலை 2026, 9:53 am IST

நீலகிரி: கூடலூர் ஓவேலி மலைத் தொடரில் பூத்துள்ள குறிஞ்சி பூக்களைப் பார்வையிட, பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலூகா, ஓவேலி மலைத் தொடரில் 12 ஆண்டுளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்து மலைத் தொடரை அலங்கரித்துள்ளன.

ஓவேலியின் கடைக்கோடி வனப் பகுதி, விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள மலைத் தொடரில் இந்தப் பூக்கள் பூத்துள்ளதால் அதைக் காண சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவதால், சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ள பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், தொடர் கண்காணிப்புப் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை, கனியம்வயல், தேவன் மற்றும் செலுக்காடி பகுதிகளில் தினமும் யானைகள் ஊருக்குள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

The forest department has advised the public not to visit Kurinji flowers in Kudalur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.