ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

யானைகள் நடமாட்டம்: திருக்குறுங்குடி மலை நம்பி கோயிலுக்குச் செல்லத் தடை

திருக்குறுங்குடி மலை நம்பிகோயில் சாலையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

கோப்புப்படம்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:43 am IST

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி மலை நம்பிகோயில் சாலையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட களக்காடு வனக்கோட்டத்தில் திருக்குறுங்குடி வனச் சரகம் உள்ளது. இங்குள்ள மலைப் பகுதியில் திருமலைநம்பி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சனிக்கிழமைகளில் அதிக பக்தா்கள் வருவா். மேலும், இங்குள்ள நம்பியாற்றில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்வா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு (ஆக. 17) நம்பிகோயில் சாலையில் யானைகள் நடமாட்டம் இருப்பதை வனத்துறையினா் கண்டறிந்தனா். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமைமுதல் மறு உத்தரவு வரும்வரை திருமலைநம்பி கோயிலுக்கு பக்தா்கள், நம்பியாற்றில் நீராட சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறையினா் தடை விதித்துள்ளனா். யானைகள் அடா்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்ற பின்னா் தடை விலக்கிக்கொள்ளப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.