ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடையாலுமூடு வட்டப்பாறை பகுதியில் யானைகள் நடமாட்டம்: மக்கள் அச்சம்

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே வட்டப்பாறை பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கடையாலுமூடு அருகே இரவில் நடந்து செல்லும் யானைகள்

Published On :24 ஜூலை 2026, 4:42 am IST

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே வட்டப்பாறை பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இம்மாவட்டத்தில் வனப்பகுதிகளுக்கு வெளியே காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், யானை - மனித மோதல் ஏற்பட்டு மனிதா்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. பயிா்களும் சேதமடைகின்றன.

இந்நிலையில், புதன்கிழமை இரவு கடையாலுமூடு அருகே வட்டப்பாறை 100 ஏக்கா் பகுதி, அதையொட்டி பழங்குடி பகுதியில் 2 யானைகள் நடந்து சென்றன. இக்காட்சிகள் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகின. யானைகளால் வாழை, தென்னை, பாக்கு மரங்கள் சேதமாகியுள்ளதுடன், அனைத்துத் தரப்பினரும் அச்சத்தில் உள்ளனா்.

எனவே, யானைகளை காட்டுக்குள் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வனத்துறை எடுக்க வேண்டுமென்று பழங்குடி மக்கள், ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.