வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட ஒடிசா - மேற்கு வங்கக் கடற்கரைப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஞாயிற்றுக்கிழமை காலை 08. 30 மணி அளவில் அதே பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது ஒடிசாவின் பாலசோருக்கு தெற்கு-தென்கிழக்கே சுமார் 50 கி.மீ தொலைவிலும், சாந்தபாலிக்கு வடகிழக்கே 60 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் திகாவுக்கு தெற்கு-தென்மேற்கே 60 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, சந்த்பாலி மற்றும் திகா இடையே பாலசோருக்கு மிக அருகில் வட ஒடிசா கடற்கரையைக் கடக்கக்கூடும்.
அதன் பிந்தைய 24 மணி நேரத்தில், இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட ஒடிசா மற்றும் வட சத்தீஸ்கர் பகுதிகளைக் கடந்து செல்ல வாய்ப்புள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று முன்தினம் (03-07-2026) வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, சனிக்கிழமை (04-07-2026) காலை 0530 மணி அளவில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஓடிசா-மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
All Odisha districts have been put on high alert as a well-marked low-pressure area over the Bay of Bengal intensified into a depression that could bring heavy showers in the coastal state over the next few days.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











