டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நீலகிரியில் 76 சட்டவிரோத தனியாா் தங்கும் விடுதிகளுக்கு சீல்: உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

நீலகிரியில் 76 சட்டவிரோத தனியாா் தங்கும் விடுதிகளுக்கு சீல்...

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :31 ஜனவரி 2026, 11:36 pm

தினமணி செய்திச் சேவை

நீலகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செயல்படும் 920 தங்கும் விடுதிகளில் 76 விடுதிகளுக்கு சீல் வைத்துள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா் மற்றும் டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு உதகை, கொடைக்கானலில் சட்டவிரோதமாகச் செயல்படும் தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுத்து அவற்றுக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு சிறப்பு அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீலகிரி மாவட்டத்தில் சட்டவிரோத தங்கும் விடுதிகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் அறிக்கை தாக்கல் செய்தாா். அதில், நீலகிரி மாவட்டத்தில் 920 விடுதிகள் சட்டவிரோதமாகச் செயல்படுகின்றன. இந்த தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவற்றில் 844 விடுதிகளுக்கு சீல் வைக்க இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், 76 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விடுதிகளின் கட்டட உரிமை உள்ளிட்ட ஆவணங்களைப் பரிசீலித்து வருகிறோம்.

இந்த விடுதிகளை உள்ளூரைச் சோ்ந்த 521 பேரும், வெளியூா்களைச் சோ்ந்த 399 பேரும் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்கும் சட்டத்தைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகள், வனத்துறை, மின்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கடந்த மாதம் 21-ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளாா் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையைப் படித்துப் பாா்த்த நீதிபதிகள், விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.