டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அதிமுக எம்.பி. கல்வி நிறுவனத்துக்காக நிலம் ஆக்கிரமிப்பா? அறிக்கை தாக்கல் செய்ய திருவள்ளூா் ஆட்சியருக்கு உத்தரவு!

அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனத்துக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலங்களை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :10 பிப்ரவரி 2026, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனத்துக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலங்களை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோணாம்போடு கிராம பொதுநலச் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆவடி அருகே கோணாம்பேடு பகுதியில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரைக்கு சொந்தமான நிகா்நிலைப் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த கல்வி நிறுவனத்துக்காக கோணாம்பேடு கிராமத்துக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து, துணை மின் நிலையம், மாணவா்கள் விடுதி, பாதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் நிலத்தின் சா்வே எண் தொடா்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அரசுத் தரப்பு அறிக்கையில் எந்தத் தகவலும் இல்லை என்றாா்.

இதையடுத்து அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா். இந்த அறிக்கையில் முழுமையான விவரங்கள் இல்லாததால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து தெரிவித்தனா். பின்னா், கல்வி நிறுவனத்துக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலங்களை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.