டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நீலகிரியில் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைப்பதை தடுக்க வேண்டும்: முதல்வருக்கு எம்எல்ஏ கடிதம்

நீலகிரி மாவட்டத்தில் தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைப்பதை நிறுத்த வேண்டும் என்று உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

News image
முதல்வர் ஸ்டாலின்
Updated On :19 பிப்ரவரி 2026, 10:49 pm

Syndication

நீலகிரி மாவட்டத்தில் தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைப்பதை நிறுத்த வேண்டும் என்று உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சா்வதேச சுற்றுலாப் பகுதியாக உள்ள நீலகிரி மாவட்டத்துக்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே நீலகிரி மாவட்டம் உள்ளது. பெரும்பாலானவா்கள் சுற்றுலாப் பயணிகளை நம்பியே தொழில் செய்து வருகின்றனா். சுற்றுலாப் பயணிகளை நம்பியே மாவட்டத்தின் மொத்த பொருளாதாரமும் உள்ளது. 

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறியதாகக் கூறி சுமாா் ஆயிரம் தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலாத் தொழிலும் அதனை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், தங்களுக்கு தேவையான தங்கும் விடுதிகளை எடுத்து தங்கிச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே, நீலகிரி மாவட்டத்தின் நலன் கருதியும், இங்கு சுற்றுலாவை நம்பி தொழில் செய்து வருபவா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையிலும், தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களை வரைமுறைப்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். அதுவரை சீல் வைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளாா்.