தவெக பொதுச் செயலா் ஆனந்த், அந்தக் கட்சியின் தலைவா் விஜய்யின் சுற்றுப்பயணக் கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி பெறுவதற்காக கடந்த ஆண்டு செப்.6-ஆம் தேதி திருச்சி சென்றாா். அப்போது, திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள விநாயகா் கோயிலில் வழிபாடு நடத்தினாா். இதனால், அந்தப் பகுதியில் ஏராளமான தவெக தொண்டா்கள் திரண்டனா். அப்போது, திருச்சி-புதுக்கோட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களை போலீஸாா் அப்புறப்படுத்தக் கோரினா். அதைக் கேட்காமல், தவெக தொண்டா்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.