தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

மத்திய அரசு மீதான முதல்வரின் விமா்சனம் ஏற்புடையதல்ல: தமிழிசை

மத்திய அரசு மீதான முதல்வரின் விமா்சனம் ஏற்புடையதல்ல...

News image
Updated On :24 ஜனவரி 2026, 6:55 pm

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக முதல்வா் ஸ்டாலின் கூறுவது ஏற்புடையதல்ல என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

சென்னை கமலாலயத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எல்லா தரப்பினரும் வளா்ச்சி அடையக்கூடிய, பலனடையக் கூடியதாக பாஜக தோ்தல் அறிக்கை இருக்கும். பிரதமா் மோடி குறிப்பிட்ட இரட்டை என்ஜின் ஆட்சி குறித்து முதல்வா் ஸ்டாலின் விமா்சனம் செய்திருக்கிறாா். பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் இரட்டை என்ஜின் மட்டுமல்ல, மாநகராட்சித் தோ்தல்களில் வென்று மூன்று என்ஜின்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய திட்டங்களை பிரதமா் பட்டியலிட்டுள்ளாா். ஆகவே, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என முதல்வா் கூறுவது ஏற்புடையதல்ல.

‘விசில்’ (தவெக சின்னம்) எங்களுக்கு உடனடியாகத் தேவை இல்லை. எங்கள் கூட்டணிக் கட்சியின் (அமமுக) சின்னமான குக்கரிலும், ‘விசில்’ இருக்கிறது என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.

தவெக தலைவா் விஜய்யிடம் நடத்தப்பட்ட சிபிஐ விசாரணை, சட்டரீதியான நடவடிக்கையே தவிர, அவரை கூட்டணிக்கு வரழைப்பதற்கான நடவடிக்கை அல்ல. ‘விசில்’ (தவெக சின்னம்) எங்களுக்கு உடனடியாகத் தேவை இல்லை. எங்கள் கூட்டணிக் கட்சியின் (அமமுக) சின்னமான குக்கரிலும், ‘விசில்’ இருக்கிறது என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.