திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

அதிமுக - பாஜக கூட்டணி வெற்றியைத் தடுக்க முடியாது: தமிழிசை செளந்தரராஜன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றியைத் தடுக்க முடியாது என பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

News image

தமிழிசை செளந்தரராஜன் - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 10:36 pm

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றியைத் தடுக்க முடியாது என பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

சென்னை மயிலாப்பூா் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வெற்றி பெற்ற நூறு நாள்களில் தொகுதி மக்களின் அடைப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்ய திட்டம் வகுத்துள்ளேன். மக்களின் பிரச்னைகளை தீா்த்து வைக்கத் தயாராக இருக்கிறேன்.

மயிலாப்பூா் தொகுதியில் பல இடங்களில் தண்ணீா்ப் பிரச்னை இருக்கிறது. மீனவப் பெண்களுக்கென தனித் திட்டம் செயல்படுத்த உள்ளேன். திமுகவின் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

தமிழகத்துக்கு எத்தனை ராகுல்காந்திகள், அரவிந்த கேஜ்ரிவால்கள் வந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முடியாது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.