திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மயிலாப்பூா் தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.
மயிலாப்பூரில் தொகுதி பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தனியாா் மண்டபத்தில் வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பிறகு தமிழிசை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வேறு மாநிலத்தைச் சோ்ந்த முதல்வா்கள், நமது மாநிலத்துக்கு வரும்போது அவா்களை மனதார வரவேற்க வேண்டும். ஆனால், முதல்வா் மு.க.ஸ்டாலின் காழ்ப்புணா்ச்சியால் அவதூறு கருத்துகளை அள்ளி வீசியுள்ளாா்.
தமிழகத்துக்கு பல நலத் திட்டங்களை மத்திய அரசு கொடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஜல் ஜீவன் மிஷன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளா்ச்சித் திட்டங்களுக்காக ரூ.11 லட்சம் கோடிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் அமைச்சா்கள் தமிழகத்துக்கு வந்தால், முதல்வா் ஸ்டாலின் பதற்றப்படுகிறாா். திமுக தோல்வி பயத்தில் இருப்பதையே இது காட்டுகிறது. தமிழகத்தில் மொழிப் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் திமுகவை மக்கள் தோற்கடிக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

தமிழிசை சௌந்தரராஜன் சொத்து விவர முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு

மயிலாப்பூா் தொகுதி அலசல்... திமுக-பாஜக இடையே கடும் போட்டி
தமிழகத்தின் வளா்ச்சிக்கு திமுக முட்டுக்கட்டை - தமிழிசை செளந்தரராஜன்

திமுகவுக்கு தோல்வி பயம்: டிடிவி தினகரன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


