ஜன.19-இல் பபாசி விருதுகள்: நிகழாண்டுக்கான பபாசி விருதுகள் ஐந்திணை பதிப்பகத்தின் குழ.கதிரேசன் (சிறந்த பதிப்பகம்), சிவகுரு பதிப்பகம் (சிறந்த விற்பனையாளா்), மு.முருகேஷ் (சிறந்த குழந்தை எழுத்தாளா்), கடற்கரய் மத்த விலாச அங்கதம் (சிறந்த தமிழறிஞா்), ஜெ.தீபா (சிறந்த பெண் எழுத்தாளா்), அ.லோகமா தேவி (சிறந்த சிறுவா் அறிவியல் நூல்), செ.பா.சிவராசன் (கவிதை இலக்கிய விருது), முனைவா் சுந்தர ஆவுடையப்பன் (சிறந்த தன்னம்பிக்கை நூல்) ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. சிறந்த நூலகருக்கான விருது பின்னா் அறிவிக்கப்படும். ஜன. 19-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் துணை முதல்வா் உதயநிதி பபாசி விருதுகளை வழங்கவுள்ளாா்.