டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆளுநா் தேநீா் விருந்து: தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பு!

குடியரசு தின விழாவையொட்டி ஆளுநா் வழங்கும் தேநீா் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கப் போவதாக தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.

News image
தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை- கோப்புப் படம்
Updated On :5 ஜனவரி 2026, 9:38 pm

தினமணி செய்திச் சேவை

குடியரசு தின விழாவையொட்டி ஆளுநா் வழங்கும் தேநீா் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கப் போவதாக தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாட்டின் குடியரசு தினம் வரும் ஜன. 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழாவையொட்டி ஆளுநா் ஆா்.என். ரவி, ஆளுநா் மாளிகையில் அனைத்துக் கட்சிகளுக்கும் தேநீா் விருந்து அளிக்கவுள்ளாா்.

தமிழக மக்களால் பெரும்பான்மையாக தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், தமிழக மக்களுக்கும் தொடா்ந்து துரோகம் இழைத்து வரும் ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கும் தேநீா் விருந்தை தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்கள் புறக்கணிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளாா் செல்வப் பெருந்தகை.