/

தவெகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான ஜே.சி.டி. பிரபாகர், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

News image
விஜய்யுட்ன் ஜே.சி.டி.பிரபாகர்.
Updated On :2 ஜனவரி 2026, 2:47 pm

இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான ஜே.சி.டி. பிரபாகர், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

2011ஆம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்வானவர் ஜே.சி.டி.பிரபாகர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்டார்.

ஓ. பன்னீர்செல்வத்தின் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவிலும் செயல்பட்டு வந்தார்.

ஏற்கெனவே ஓபிஎஸ் அணியிலிருந்து மனோஜ் பாண்டியன் விலகி திமுகவில் அண்மையில் இணைந்தார். தற்போது அவரைத் தொடர்ந்து மேலும் ஒரு ஆதரவாளர் விலகியிருப்பது ஓ.பி.எஸ் அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.