/

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தமிழகம் வருகிறார்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தமிழகத்திற்கு வரவுள்ளது பற்றி...

News image
ஞானேஷ்குமார் - IANS
Updated On :18 பிப்ரவரி 2026, 10:17 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்திற்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளதையடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தமிழகம் வரவுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் தேர்தல் பணிகள் தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தமிழகம் வருகிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வருகிற பிப். 26, 27 ஆம் தேதிகளில் சென்னை வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிப்ரவரி இறுதியில் தேர்தல் அரிக்கப்பட்டு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.