

தமிழகத்தில் 95 சதவீத கிராம ஊராட்சிகளில் அதிவேக இணைய கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
நிதிநிலை அறிக்கையில் அவா் குறிப்பிட்டிருப்பதாவது: தகவல் - தொழில்நுட்ப வளா்ச்சியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் கண்ணாடி இழை கம்பிவடம் பொருத்தி அதிவேக இணையக் கட்டமைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் சாா்பில் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 95 சதவீத கிராமங்களில் (11,953 கிராமங்கள்) பணிகள் நிறைவடைந்துள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபா் 11-ஆம் தேதி 10,000 கிராமங்களில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இணையவழியில் கலந்துகொண்டு உரையாற்றினாா்.
இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம (டிஜிட்டல்) சேவை துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
டிரெண்டிங்

சிதம்பரத்தில் ரூ.450 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் ஒருங்கிணைந்த நிலப்பறவைகள் கணக்கெடுப்பு : இன்று தொடக்கம்

நாகை: ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்

திருப்பூா் தெற்கு பகுதி 140 ஊராட்சிகளில் ஜன.26-இல் கிராம சபைக் கூட்டம்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

