டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புதுச்சேரியை காந்தி குடும்பத்து ஏடிஎம் போல பயன்படுத்திய நாராயணசாமி! அமித் ஷா

புதுச்சேரியை காந்தி குடும்பத்து ஏடிஎம் போல பயன்படுத்திய நாராயணசாமி என்று அமித் ஷா குற்றச்சாட்டு

News image
காரைக்காலில் அமித் ஷா- DPS
Updated On :14 பிப்ரவரி 2026, 9:14 am

இணையதளச் செய்திப் பிரிவு

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி புதுச்சேரியை காந்தி குடும்பத்து ஏடிஎம் போல பயன்படுத்தி வந்தார் என்று காரைக்காலில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

காரைக்காலில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுடன் செய்துள்ள வர்த்தக ஒப்பந்தம் காரணமாக மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதாயம் மட்டுமே கிடைக்கும், தீங்கு ஏற்படாது.

மோடி இன்னும் சில காலத்தில் புதுச்சேரிக்கு அறிவிப்புகள் மற்றும் திறப்பு விழாக்களை நடத்த உள்ளார். ஆகையால் மோடி மற்றும் ரங்கசாமிக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

பயோ பார்மா துறையை விரிவாக்க புதுச்சேரி மாநிலத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் பழைய ஜவுளி துறை ஆலைகளை புத்துயிர் அளித்து அவைகளை புத்துயிர் ஆக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விற்பனைக்கு விட்ட மோசமான செயலையும் நாராயணசாமி செய்துள்ளார். அவருடைய காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தொழில் கூட தொடங்கவில்லை. இங்கு ஐந்து ஆண்டுகளில் ஸோஹோ நிறுவனம் மூலம், மென்பொருள் நிறுவனத்தை தொடங்கியுள்ளது தற்போதைய புதுச்சேரி அரசு.

மேலும், புதுச்சேரியில் லேப்டாப் தயாரிக்கும் நிறுவனமும் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி வளர்ச்சித் திட்டத்திற்கு வழங்கப்பட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய் வரவு செலவு திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து சிஏஜி அறிக்கையின் மூலம் தெரிந்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களை அவமானப்படுத்தும் மோசமான செயல்களை நாராயணசாமி செய்துள்ளார். அண்மையில் பிரதமர் நரேந்தமோடி மலேசியா சென்றபோது திருவள்ளுவருக்கான இருக்கை ஒன்றை ஏற்படுத்துவதாக உறுதியளித்தார். அங்கே மலேசியா வாழ் தமிழ் மாணவர்களுக்கு திருவள்ளுவர் பெயரில் ஊக்கத்தொகை அளிப்பதாக மோடி உறுதி அளித்துள்ளார்.

மலேஷியா நாட்டில் தமிழ் மொழிக்கு சிறுபான்மை மொழி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. நாராயணசாமி புதுச்சேரி மாநிலத்தை காந்தி குடும்பத்து ஏடிஎம் இயந்திரம் போல பயன்படுத்தி வந்தார். தில்லி கஜானாவை நிரப்பும் வேலையை மட்டுமே செய்து வந்தார். பல பதவிகளை அவர் ஏலம் விடும் செயலில் ஈடுபட்டார். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ஏலத்தில் விட்டார்.

போக்குவரத்து துறையை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என நாராயணசாமி லைசன்ஸ் கொடுத்து இருந்தார். அடுத்த ஐந்தாண்டுகளில் நாம் மூன்று துறைகளில் நம்முடைய கவனத்தை செலுத்தி ஆட்சி அமைக்க உள்ளோம்.

புதுச்சேரி மீனவர்களின் பொருள்களை உலக சந்தைகளில் கொண்டு சேர்க்க நமது இலக்கு இருக்க வேண்டும். தகவல் தொழில் நுட்பம், தரவுகள் மையம், செய்யறிவு உள்ளிட்ட துறைகளில் புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பாஜக ஏற்படுத்தி கொடுக்கும்.

கடந்த 5 ஆண்டுகளில் சட்டம் - ஒழுங்கு மற்றும் வளர்ச்சிகளை சீர் செய்துள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதுச்சேரியை வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்ற வேண்டும். இன்று நம்முடைய மோடியின் அரசைப் பார்த்து எந்தவொரு தீய சக்தியும் கண்ணெடுத்து பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது.

புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதும் பாஜக மீதும், ரங்கசாமி மற்றும் மோடி மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 44 சதவீத வாக்குகள் அளித்து ஆதரவு அளித்தார்கள். இந்த முறை பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அதிமுக கட்சிகளோடு இணைந்து புதுச்சேரியில் 64 சதவீத வாக்குகள் பெற்று 24 தொகுதிகளை வெல்லும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.