அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் விலகல்! திமுகவில் இணைகிறார்?
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் விலகியுள்ளது பற்றி...


அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏவும் அதிமுக ஆட்சியில் தொழிலாளர் துறை அமைச்சராகவும் இருந்த நிலோபர் கபீல் அதிமுகவில் இருந்து விலகுவதாக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
"நான் நீண்ட காலமாக கழகத்தில் பயணித்து வந்தேன். தற்சமயம் எனது சொந்த சூழ்நிலை காரணமாக கழகத்தில் தொடர்ந்து பணிபுரிய இயலவில்லை. எனவே, நான் எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். எனது விலகல் கடிதத்தை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இதுவரை தாங்கள் எனக்கு அளித்த மரியாதைக்கு நன்றி மற்றும் கழக நிர்வாகிகளுக்கும். குறிப்பாக திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெறும் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நிலோபர் கபீல் திமுகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...