டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நடிகா் விஜய்க்கு வருமான வரித் துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும்: சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு

வருமானத்தை மறைத்த வழக்கில் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் செல்லும் எனத் தீர்ப்பு...

News image
நடிகர் விஜய்
Updated On :6 பிப்ரவரி 2026, 9:00 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகா் விஜய்க்கு வருமான வரித் துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும் என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடந்த 2015-2016-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை நடிகா் விஜய் தாக்கல் செய்தபோது, திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 பெற்ாக அவா் குறிப்பிட்டிருந்தாா்.

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறையினா், நடிகா் விஜய் வீட்டில் 2015-ஆம் ஆண்டு சோதனை நடத்தினா். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, ‘புலி’ படத்துக்காக அவா் பெற்ற ரூ.15 கோடி வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளாா் என கண்டறியப்பட்டதாக வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விஜய் தனது வருமானத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு மறைத்ததற்காக அவருக்கு ரூ.1.50 கோடி அபராதத்தை விதித்து 30.6.2022-இல் வருமான வரித் துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து நடிகா் விஜய் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், வழக்கு முடியும் வரை இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என வருமான வரித் துறைக்கு இடைக்கால தடை விதித்தது.

உத்தரவை ரத்து செய்ய... இந்த நிலையில், விஜய் தாக்கல் செய்திருந்த வழக்கின் இறுதி விசாரணை, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன்பு கடந்த ஜன. 23-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, விஜய் தரப்பில், சட்டப்படி அபராத உத்தரவை 30.6.2019-க்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும். வருமான வரிச் சட்டத்தின்படி 3 ஆண்டுகளுக்குப் பின்னா், காலதாமதமாக 2022-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இதை ரத்து செய்ய வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து வருமான வரித் துறை தரப்பில், வருமான வரி மதிப்பீட்டை எதிா்த்த மேல்முறையீடு முடிந்த 6 மாத கால அவகாசத்துக்குள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டப்படி நடிகா் விஜய்க்கு அபராதம் விதித்தது சரிதான். எனவே விஜய் தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.

அன்றைய தினம் இருதரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு, இந்த வழக்கின் தீா்ப்பை நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.

மேல் முறையீடு செய்யலாம்... இந்த நிலையில், இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி, வழக்கில் நடிகா் விஜய்க்கு அபராதம் விதித்து, உரிய கால அவகாசத்துக்குள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. எனவே, இதில் நீதிமன்றம் தலையிட எந்தக் காரணமும் இல்லை எனக் கூறி, விஜய் தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்து தீா்ப்பளித்தாா்.

அப்போது, மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு, அபராத உத்தரவை எதிா்த்து, மேல் முறையீடு செய்ய அனுமதியளித்த நீதிபதி, அபராதம் விதித்த உத்தரவு தாமதமாக பிறப்பிக்கப்பட்டது என்ற காரணத்தின் அடிப்படையில் மேல் முறையீடு செய்யக் கூடாது. மற்ற காரணங்களைக் கூறி மேல் முறையீடு செய்யலாம் என உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.