ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது குறித்து...

தமிழக மீனவர்கள் கைது - பிரதிப் படம்

Published On :13 ஆகஸ்ட் 2026, 8:24 am IST

எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள், 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க புதன்கிழமையில் கடலுக்குள் சென்றனர்.

இந்த நிலையில், கச்சத்தீவு - தலைமன்னார் இடையே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்து நீடித்து வரும்நிலையில், இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கு மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் விஜய், ஆக. 6 ஆம் தேதியில் கடிதமும் எழுதினார். இருப்பினும், தமிழக மீனவர்கள் கைது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

Summary

Sri Lankan Navy arrests 9 Tamil Nadu fishermen

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.