ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

யுபிஐ கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்! நயினார் நாகேந்திரன்

யுபிஐ கட்டணம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவு...

TN BJP president Nainar Nagenthran

நயினார் நாகேந்திரன் - IANS

Published On :8 ஆகஸ்ட் 2026, 1:02 pm IST

யுபிஐ கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

எண்ம உலகில் தற்போது அனைத்து இடங்களிலும் யுபிஐ பணப்பரிவர்த்தனை சாதாரணமாகி விட்டது. இந்நிலையில் யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை மத்திய அரசு கொண்டுவரவிருக்கிறது.

இந்நிலையில், பொதுமக்களின் தினசரி யுபிஐ பணப் பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

மேலும், வணிகா்களுக்கு மட்டுமே யுபிஐ பரிவா்த்தனையில் கட்டணம் விதிப்பது குறித்துப் பரிசீலிப்பதாகவும், நுகா்வோருக்கு அது பொருந்தாது எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இந்நிலையில் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில்,

"யுபிஐ கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ‘டிஜிட்டல் இந்தியா’ இன்று உலகையே வியக்க வைக்கும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

2016-ல் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, சாமானிய மக்கள் யுபிஐ மூலம் மேற்கொள்ளும் பணப்பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசமாகவே இருந்து வருகின்றன.

வரும் காலங்களிலும் சாமானிய மக்களிடமோ அல்லது சிறு கடைக்காரர்களிடமோ ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்கப்படாது என்பதே உண்மை.

உலகின் மிகப்பெரிய பணப்பரிவர்த்தனை அமைப்பான யுபிஐ-ன் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவே தற்போது நிதி ஆதாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இது வணிகர்களுக்கும் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான வணிக ஒப்பந்தமே தவிர, இது சாமானிய மக்களுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதே நிதர்சனம்.

வரி விதிப்பு தொடர்பான புதிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகுதான், இது குறித்து நிபுணர் குழு உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு இறுதி முடிவெடுக்கும்.

எனவே, எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்திற்காகப் பரப்பும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Do not believe the rumors being spread about UPI payments: Nainar Nagendran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.