ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஹஜ் பயணிகளுக்கு மானியம் உயர்வு! நிதியமைச்சா் அறிவிப்பு!

ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.10 ஆயிரம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது பற்றி..

பட்ஜெட்

நிதியமைச்சர் என். மரிய வில்சன் - படம்: விடியோ கிளிப்

Published On :5 ஆகஸ்ட் 2026, 11:36 am IST

ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.10 ஆயிரம் உயர்த்தப்பட்டு தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் என். மரிய வில்சன் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

இந்த நிதிநிலை அறிக்கையில், புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற சமூக நீதி அரசாகவும், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு முன்னோடி மாநிலமாகவும் தமிழ்நாடு திகழும். சிறுபான்மையின மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையினை இந்த அரசு தொடர்ந்து வழங்கும்.

தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி மூலம் முதல்முறையாகப் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழங்கப்படும் ரூ(.25,000 மானியம், ரூ. 35,000 ஆக உயர்த்தப்படும்.

கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் ரூ. 1.05 கோடி ஒதுக்கீட்டில் கூடுதலாகத் துவக்கப்படும். மேலும், கபர்ஸ்தான்கள், கல்லறைத் தோட்டங்களின் உள்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காகத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ. 34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.