மத்திய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து தமிழகத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்பட்டு வரும் மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து, அந்தந்த மாநிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்குவதை நிறுத்தவும், மத்திய மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் போட்டி ஏல அடிப்படையில் விலை நிா்ணயித்து விற்பனை செய்யவும் மத்திய மின் அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது.
இது மாநிலங்களின் மின் தேவையை சமாளிப்பதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், மாநிலங்களின் உரிமையையும் பறிக்கும் விதமாக உள்ளது.
இது தமிழகத்துக்கு மட்டுமன்றி, அனைத்து மாநிலங்களின் மின் வாரியங்களுக்கும் மின்சாரம் வழங்கல் மற்றும் பொருளாதார அடிப்படையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் தங்களின் முடிவை கைவிட்டு, தற்போது நடைமுறையில் உள்ளவாறே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உணவுக் கழிவுகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் ஆலை புத்துயிா் பெறுமா?

ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கக் கூடாது: அன்புமணி

கோயம்பேடு பேருந்து நிலையத்தை வணிக வளாகமாக மாற்றக் கூடாது: அன்புமணி







